ஷாருக்கானை அமெரிக்க விமான நிலையத்தில் அவமதித்து விட்டார்கள் என்கிற செய்தி ஊடங்களின் பரபரப்பு பசிக்கு கிடைத்த தீனியாகிவிட்டன. சட்ட மீறல் மற்றும் பிரபலங்களை பார்த்து பல்லிளித்து, சலாம் போட்டு தம் கடமையை சரி வர செய்யாதிருத்தல் என்றே பழகிப் போன இந்(த)திய ஜென்மங்களுக்கு - சட்டப்படி தம் கடமையை செய்தால், அது பிரபலங்களை அவமானப்படுத்துவது போல தான் தெரியும். பத்திரிகை செய்தியை பார்ப்போம்."நியூயார்க்கில் இந்தி நடிகர் ஷாரூக்கானை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் இரண்டு மணிநேரம் நியூயார்க் விமானநிலையத்தில் தடுத்து வைத்தனர். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். யேல் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக ஷாரூக்கானும் அவருடன் முகேஷ் அம்பானியின் மனைவி நீடாவும் நியூயார்க் சென்றிருந்தனர்.
நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும், ஷாரூக்கான் என்ற பெயரைக் கேட்டதும் கிலி அடைந்தார் போல் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை அப்படியே ஓரம்கட்டி உட்காரவைத்துவிட்டனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து ஷாரூக்கானிடம் விசாரணை நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியே இரண்டு மணிநேரம் ஓடிப் போய்விட்டது. இதன் பிறகே ஷாரூக்கான் விடுவிக்கப்பட்டார்.யேல் பல்கலைக் கழகமும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுதான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது." என்கிறது செய்தி.
இந்த அமெரிக்க வேலையை - இந்தியா கண்டிக்க வேண்டாமா? கண்டித்துள்ளது. "அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தை இந்தியா சற்று கடுமையாக அணுகவுள்ளது. தடுத்து நிறுத்துவதும் பின்பு மன்னிப்புக் கேட்பதுமே அமெரிக்காவிற்கு வாடிக்கையாகிவிட்டது என்று இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இயந்திரத்தனமாக மன்னிப்புக் கேட்பது போதாது என்றும் இந்தியா கருத்துக் கூறியுள்ளது.
அமெரிக்க உயரதிகாரிகளின் நிலையில் இந்த விவகாரத்தை கொண்டு செல்லுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்." தூதரக அதிகாரிக்கு சம்மனாம். இது தொடர்பாக தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணை அதிகாரி டொனால்ட் லுவுக்கு, வெளியுறவுத்துறை இணைச் செயலர் (அமெரிக்கப் பிராந்தியம்) ஜாவேத் அஷ்ரப் சம்மன் அனுப்பினார். இதற்கிடையில் அமெரிக்க விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்ததற்காக ஷாரூக் கானிடம் அமெரிக்கத் தூதரகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது"சினிமா நடிகரை பார்த்து பல் இளிக்காத அமெரிக்க சட்டங்களுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலை வணங்குவோம். அதை விடுத்து அவதூறு பேசுவதை நிறுத்துவோம். இன்றைக்கு அன்னா ஹஸாரே குழுவால் பிரபலமடைந்துள்ள கிரண் பேடியை எண்பதுகளில், போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் - "கிரௌன்" பேடி என்று செல்லமாக அழைக்கும் ஊடகங்கள். காரணம் - மேலிட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தம் கடமையை செவ்வன செய்ததால்... அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் நான்கு சக்கர வாகனம் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்ததால் - பிரதமர் வாகனம் என்று தெரிந்தும் அப்புறப்படுத்தினார். அதற்கான பலனை அவர் அனுபவிக்க நேர்ந்தாலும் - அதற்காக அவர் வருந்தவில்லை.
இந்தியாவில் இப்படி விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே - கடமை தவறாதவர்கள். ஆனால் அமெரிக்காவில் தேடினாலும் கிடைக்காது - அதிகாரம் துஷ்பிரயோகம் செய்பவர்கள். ஷாரூக்கான் முஸ்லீம் என்பதால் இத்தகைய விசாரனை என்பது சரியல்ல... மத்திய அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸும் இத்தகைய விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் ஒரு கிறிஸ்தவர் இல்லையா? மாறிவரும் சூழலுக்கேற்ப்ப - பாதுகாப்பு முறைகளும் மாறி கொண்டிருக்கின்றன. ஒரு தகவல்... சீக்கியர்கள் விமான கடத்தல் ஒன்றில் ஈடுபடுவதற்கு முன்பு வரை - விமான பயணத்தில் கூட அவர்கள் தங்கள் வீர வாளை எடுத்து செல்ல அனுமதி இருந்தது என்பதை அறிவீர்களா? இன்றைக்கு அது சாத்தியமா?

மக்களுக்கு மதம் பெரிசாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு மத உணர்வுகளை விட மனித உயிர்கள் முக்கியம். மேலும் அமெரிக்காவில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கிய பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின் காலில் வேவு பார்க்கும் விதமான ஒரு கருவியை கட்டிவிட்டது - முறைகேடாக தங்கியுள்ள அவர்களை கண்காணிக்கும் விதமாக... இதுவும் இந்திய அரசால் கண்டிக்கப்பட்டது.
இத்தகைய செயல்கள் எல்லாம் அமெரிக்காவின் ஆணவப் போக்கை காட்டுகிறதா? கடவுளே (?) விமானத்தில் வந்து இறங்கினாலும் அவரையும் அமெரிக்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தவே செய்வார்கள். காரணம் மக்களின் பாதுகாப்பும், உயிரும் முக்கியம். எவ்வளவு பெரிய வி.வி.ஐ.பி யாக இருந்தாலும் - ஒரு நாட்டுக்கு செல்ல விமானம் ஏறிவிட்டாலே - அந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்படுபவர்கள் ஆகிறிர்கள். "நான் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? எவ்வளவு பெரிய அரசியல்வாதி தெரியுமா?" என்று சொல்லி கொண்டே இருந்தால்... சொல்லி கொண்டேடேடேடே இருக்க வேண்டியது தான்.
இந்தியாவை விட மிக பெரிய எல்லைகளை கொண்ட அமெரிக்காவுக்கு எப்படி வேண்டுமானாலும் அச்சுறுத்தல், ஆபத்தும் ஏற்படலாம். அதோடு உலக போலீஸ்காரன் வேறு. அவர்களுக்கு தங்களின் மக்கள் முக்கியம். "கொத்து கொத்தாக மக்களும், மீனவர்களும்" மடிந்தாலும் - அதை பற்றி கவலைப்படாத அரசு ஒரு புறம்... இடம் பெயர்ந்து தமிழகத்திற்கு வரும் வட இந்திய மக்களால் நிகழும் அனர்த்தங்களை தடுக்க ஒரு சட்டம் போட்டால் - அதற்கும் இடைக்காலத்தடை வாங்கும் மேதாவிகள் மறுபுறம். நமக்கென்ன தகுதி உள்ளது - அமெரிக்கனின் கடமை பற்றி பேச.
இதே ஷாரூக்கான் தான் கோக் பானம் குறித்த சர்ச்சையின் போது, "இங்கே தடை போட்டால் அமெரிக்காவில் போய் குடிப்பேன்" என்றார். ஆக, அமெரிக்கா வேண்டும். ஆனால் அமெரிக்க சட்ட, திட்டங்கள் வேண்டாம் என்பது தான் நிறைய பேர் நிலைப்பாடு. அமெரிக்கனை போல பெப்சி, கோக்கை குடிக்க கற்று கொண்டோம். அமெரிக்க பெண்களை போல காத்தோட்டமாக ஆடை உடுத்த கற்று கொண்டோம். ஆனால் அவர்களை போல சட்டத்தை மதிக்க எப்போது கற்று கொள்வோம்.

தெற்காசியா போதை மருந்து கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி? கடமையை மீறுபவர்களால் தானே. அமெரிக்க பதிவர் ஆதிமனிதன் அமெரிக்க ஒழுங்கு மற்றும் பண்புகள் குறித்து நிறைய எழுதி உள்ளார். முக்கியமாய் காவல்துறையின் செயல்பாடுகள். ஊடகங்களே... இனி யாரையேனும் அமெரிக்கா சோதனைக்கு உட்படுத்தினால் - அதை பரபரப்பு செய்தியாக்காதீர்கள். "அவர்கள் கடமையை அவர்களாவது சரி வர செய்கிறார்களே" என்று சந்தோஷப்பட்டு, செய்தியை விட்டு தள்ளுங்கள்.
நன்றி நண்பா
ReplyDeleteநன்றி நண்பா
DeleteYou have written what was going on my mind. exact words. keep it up.
ReplyDelete-surya
நன்றி சூரியா.
Deleteசினிமா நடிகரை பார்த்து பல் இளிக்காத அமெரிக்க சட்டங்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலை வணங்குவோம்
ReplyDeleteமத உணர்வுகளை விட மனித உயிர்கள் முக்கியம்.
இந்தியாவில் இப்படி விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே - கடமை தவறாதவர்கள். ஆனால் அமெரிக்காவில் தேடினாலும் கிடைக்காது
நியாயங்களை கூறிய உங்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் நடத்தபடும்படும் தமிழ்வெறி பிரசாரங்களை விட மனித உயிர்கள் தமிழர்கள் உயிர்கள் முக்கியம் என்பதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.
baleno
Deleteமொழி ஆர்வத்தை வெறி என்று சொல்லி அமெரிக்க பாதுகாப்புடன் முடிச்சு போட்டுள்ளீர்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதை அறிவீர்களா? இரண்டுமே அவரவர் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படுபவையே. எனது மொழி இன உணர்வை அல்லது வெறியை, இடம் பெயர்ந்து போன, பணிக்கு போன இடத்தில் காட்டினால் தான் தவறு.
You R Right Boss. நீங்கள் எப்படி?
ReplyDeleteபனங்கொட்டை, நான் எழுதிய பதிவை வாசித்துவிட்டு என்னிடம் கருத்து கேட்பது வியப்பாக உள்ளது.
DeleteI like this name பனங்கொட்டை! அப்படி கூப்பிட காரணம் என்ன?
ReplyDelete///பனங்கொட்டை, நான் எழுதிய பதிவை வாசித்துவிட்டு என்னிடம் கருத்து கேட்பது வியப்பாக உள்ளது./// இது நல்ல ஜோக்!
வருகைக்கு நன்றி நம்பள்கி
DeleteIndian who does not support film actors,
ReplyDeleteSharuk Khan is not god , he may be a celebrity in India no one know him in US.If any Hollywood actor is ill treated in India. It happens to so many people like MJ and Ricky Martin even for Richard Gere.American govt never stepped in those cases. Why India over reacted to Sharuk Khan issue.
When Raul Gandhi was arrested with a Columbian drug cartels daughter and with several hundred thousand dollars in cash in Boston Airport, Prime minister Vajpayee reacted so quickly and released him - that was the beginning of all the mistakes like this.
How much help India offered to Dhrun Ravi one good kid is under racial discrimination facing 20 years in prison. None of you might be even know about the story. Rich and famous will save themselves so don't worry much about them.
அனானி,
Deleteதமிழில் பின்னூட்டம் இடுங்கள்.
தமிழில் பின்னூட்டம் இடுவதே சிறப்பு.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் அப்துல்கலாம் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்வதை எப்படி பார்ப்பது. அது சரி என்றால், அந்த நாட்டு அதிபர் இங்கே வரும்பது மட்டும் நம்மூர் அதிகாரிகளை அவரை நெருங்க கூட விட மாட்டேன்கிறார்களே?
ReplyDeleteநம்மூர் அதிகாரிகளால் நெருங்க முடியவில்லை என்றால் அது நம் பலவீனம். அந்த பலவீனத்தை நாம் மாற்றி கொள்ள தான் வேண்டும்.
Deleteஇதில் முக்கியமாக பார்க்க வேண்டியது எது கேவலம் எது முக்கியம் எது மனம் என்பதுதான்.
ReplyDeleteஅமெரிக்க சட்டத்திற்கு ஷாருக்கானும் ஒன்றுதான் ஓபாமாவும் ஒன்றுதான். அமெரிக்கா குடிமகன் ஒருவனை அவ்வாறு செய்தால் அதை அவன் கேவலமாக நினைக்கமாட்டான். அதிகாரிகள் தங்கள் கடமையை செய்கிறார்கள் என விட்டுவிடுவான். அவர்களின் கூற்றுபடி ஷாருக்கானுக்கு நடைப்பெற்றது கேவலம் அவமானமோ கிடையாது. கெட்ட உள்நோக்கம் இருந்தால் மட்டும் அது தவறு
உதாராணமாக, பெருவாரியான வெள்ளைகாரரெல்லாம் இந்தியா மீது குண்டு வைத்து தாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், நமது விமான நிலையங்களில் வரும் அனைத்து வெள்ளைகாரனையும் ஷாருக்கானைப்போல் விசாரிக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் இந்தியாவுக்கு வரமாட்டார்கள்.
அருமையாக சொல்லிவிட்டீர்கள் நரேன்.
Deleteநல்ல பதிவு ஜி...
ReplyDeleteமாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போதும், இது போன்ற கடுமையான சோதனைகளை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்டது....
இதில் கூச்சல் போட ஒன்றுமே இல்லை....
ஷாருக் பொதுவாகவே ஒரு புகழ் விரும்பி... இதை சாக்கிட்டு, மேலும் புகழ் தேட ஆசைப்பட்டார், அவர் நேரம், நடந்தும் விட்டது.....
அவமானப்பட்டாலும் அமெரிக்கனிடம் அவமானப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
Deletei agree with you and admire you.... indian democracy is what the indian politician decide, irrespective whether ruling or opposition party.. this rule is applicable to indian law as well..
ReplyDeleteஇதைப்பற்றி வேறு ஒருவரும் பதிவிட்டு இருந்தார்...அதே கருத்தை இங்கே வைக்கிறேன் கமல்ஹாசன் ஜட்டியை கூட சோதித்தார்கள் அமெரிக்காவில் அப்ப ஒரு நாயும் குலைக்கலையே ஏன்?
ReplyDeleteகுலைக்கணும்னு என்ன அவசியம். கமலஹாசன் வீட்டுக்கு நீங்க போனா விசாரிக்காம்ம உள்ள விடுவாங்களா?
Deleteகமல்ஹாசன் தமிழன் சார்!அமைச்சர் கிருஸ்ணாவுக்கு அப்ப நியாயமா பட்டது...இந்தி நடிகன் என்றதும் அநியாயமா பட்டிருச்சு அறிக்கை விடறார்....
Delete